என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீராணம் ஏரியை தூர் வாரியதில் முறைகேடு: திருமாவளவன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்3 Nov 2017 10:27 AM GMT (Updated: 3 Nov 2017 10:28 AM GMT)
காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியை தூர் வாரியதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் திருமாவளவன் வீராணம் ஏரியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக தமிழக அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
அதில் வீராணம் ஏரிக்கு மட்டும் 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி முறையாக தூர்வாரப்பட்டிருந்தால் தற்போது வீராணம் ஏரியில் சுமார் 1.4 டி.எம்.சி. தண்ணீர் இருந்து இருக்கும்.
ஆனால் தற்போது 1 டி.எம்.சி. கூட தண்ணீர் இல்லை. தூர்வாரும் பணியில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை குடிநீருக்கு தண்ணீர் தேவைதான். இருப்பினும் வீரணம் ஏரியிலிருந்து சம்பா, குறுவை, சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும்.
மழை, வெள்ள பதிப்புகளுக்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2 நாள் மழைக்கே சென்னை அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிதி போதாது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.
சென்னை மழை பாதிப்பில் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் திருமாவளவன் வீராணம் ஏரியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக தமிழக அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
அதில் வீராணம் ஏரிக்கு மட்டும் 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி முறையாக தூர்வாரப்பட்டிருந்தால் தற்போது வீராணம் ஏரியில் சுமார் 1.4 டி.எம்.சி. தண்ணீர் இருந்து இருக்கும்.
ஆனால் தற்போது 1 டி.எம்.சி. கூட தண்ணீர் இல்லை. தூர்வாரும் பணியில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை குடிநீருக்கு தண்ணீர் தேவைதான். இருப்பினும் வீரணம் ஏரியிலிருந்து சம்பா, குறுவை, சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும்.
மழை, வெள்ள பதிப்புகளுக்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2 நாள் மழைக்கே சென்னை அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிதி போதாது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.
சென்னை மழை பாதிப்பில் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X