என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி வீட்டில் வெள்ளம் புகுந்தது
Byமாலை மலர்3 Nov 2017 4:48 AM GMT (Updated: 3 Nov 2017 4:49 AM GMT)
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியதால், அதை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்னை:
சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.
குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
அண்ணாநகர், அடையார், போயஸ் கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியானவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் மழைநீர் வீடுகளை சுற்றி நிற்கிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது. இவரது வீட்டை சுற்றி குடிசைகளே கிடையாது. ஆனாலும் நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. கார் நிறுத்தும் இடம், பாதுகாவலர்கள் அமரும் இடத்தில் 1 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வெளியேற்ற முடியாமல் தவித்தனர்.
இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை வெளியேற்றினார்கள். பின்னர் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
நகரில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் கோபாலபுரம் மட்டுமின்றி பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதை காண முடிந்தது.
ரோட்டின் நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாகவும் கழிவு நீர் ரோட்டுக்கு மேலே மழைநீருடன் கலந்து ஓடுகிறது. அந்த தண்ணீரில் கால்பட்டால் பிசுபிசு என துர்நாற்றம் வீசுகிறது.
நுங்கம்பாக்கம்- வள்ளூவர் கோட்டம் மெயின் ரோட்டில் தேங்கி கிடக்கும் தண்ணீர் கறுப்பு கலரில் சாக்கடையாக காட்சியளிக்கிறது. மக்கள் வேறு வழியின்றி அதை கடந்து செல்கிறார்கள்.
சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.
குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
அண்ணாநகர், அடையார், போயஸ் கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியானவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் மழைநீர் வீடுகளை சுற்றி நிற்கிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது. இவரது வீட்டை சுற்றி குடிசைகளே கிடையாது. ஆனாலும் நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. கார் நிறுத்தும் இடம், பாதுகாவலர்கள் அமரும் இடத்தில் 1 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வெளியேற்ற முடியாமல் தவித்தனர்.
இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை வெளியேற்றினார்கள். பின்னர் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
நகரில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் கோபாலபுரம் மட்டுமின்றி பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதை காண முடிந்தது.
ரோட்டின் நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாகவும் கழிவு நீர் ரோட்டுக்கு மேலே மழைநீருடன் கலந்து ஓடுகிறது. அந்த தண்ணீரில் கால்பட்டால் பிசுபிசு என துர்நாற்றம் வீசுகிறது.
நுங்கம்பாக்கம்- வள்ளூவர் கோட்டம் மெயின் ரோட்டில் தேங்கி கிடக்கும் தண்ணீர் கறுப்பு கலரில் சாக்கடையாக காட்சியளிக்கிறது. மக்கள் வேறு வழியின்றி அதை கடந்து செல்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X