search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்கண்ட் மாநிலத்தில் தீபா?: சென்னையில் தவிக்கும் கணவர்
    X

    ஜார்கண்ட் மாநிலத்தில் தீபா?: சென்னையில் தவிக்கும் கணவர்

    மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் அவருடைய கணவர் மாதவனுக்கும் ஏற்பட்ட தகராறில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய தீபாவை 4 நாட்களாக காணவில்லை.
    சென்னை:

    மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவரது கணவர் மாதவன். இருவரும் தியாகராயநகரில் வசித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் சாயலை ஒத்து இருக்கும் தீபாவை ஜெயலலிதாவின் வாரிசாக அரசியலில் நிலைநிறுத்த தொண்டர்கள் தயாராக இருந்தனர்.

    ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகையாலும், அவர்களின் எதிர் பார்ப்பாலும் தீபா திக்கு முக்காடி போனார்.

    ஆனால் அரசியல் பாதையில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவரை தடுமாற வைத்தது. கணவர் ஒருபுறமும், குடும்ப நண்பர் ஒருபுறமும் இருக்க அரசியல் பயணத்தை தொடர முடியாமல் தடுமாறினார்.

    ஒரு கட்டத்தில் தனிக்கட்சி தொடங்கும் நிலைக்கு அவரது கணவன் மாதவன் சென்றுவிட்டார்.

    குடும்ப நண்பராகவும், கார் டிரைவராகவும் இருக்கும் ராஜா என்பவரது கை ஓங்கியதால் கட்சியிலும், குடும்பத்திலும் சர்சைகள் எழுந்தன.

    கணவர் மாதவனும், தீபாவும் தனித்தனியாக வாழும் நிலையும் உருவானது. ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்குள் தீபா புகுந்தார். அந்த பரபரப்பில் தீபாவுக்கு கணவர் மாதவனும் பக்க பலமாக இருந்தார்.

    இதனால் மீண்டும் இருவரும் ஒன்றாக வசித்து வந்தார்கள். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜாவின் பிரவேசம் மீண்டும் குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அரசியலைப் போலவே, குடும்ப வாழ்க்கையிலும் முடிவெடுக்க முடியாமல் தீபா தடுமாறினார்.

    கடந்த 26-ந்தேதி இரவு ராஜாவுக்கும், தீபாவின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மாதவன் தி.நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ராஜா மீது 323, 506(1) ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையில் தீபா போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று கணவர் கொடுத்துள்ள புகார் பொய்யானது. ராஜா அவரை எதுவும் செய்யவில்லை என்று புகார் கூறினார். கணவருக்கு எதிராக தீபா வாதாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே நெருடலை உருவாக்கியது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய தீபாவை 4 நாட்களாக காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

    வழக்கு விசாரணைக்காக போலீசார் ராஜாவை தேடுகிறார்கள் அவரையும் காணவில்லை.

    இதற்கிடையே தீபா சென்னையில் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டதும், அவர் ஜார்கண்ட் எண்ணில் இருந்து பேசியதும் தெரிய வந்துள்ளது. எனவே அவர் ஜார்கண்டில் இருப்பதாக கருதுகின்றனர். அவருக்கு உதவியாக ராஜாவும் ஜார்கண்டுக்குத்தான் சென்றிருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சென்னையில் தனியாக தவிக்கும் மாதவன் மனைவி தீபாவை தேடிக் கொண்டிருக்கிறார்.
    Next Story
    ×