என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாநகராட்சிக்கு வரி-வாடகை பாக்கி: வியாசர்பாடியில் 26 கடைகளுக்கு சீல்
பெரம்பூர்:
வியாசர்பாடி சர்மா நகர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜவுளிக்கடை, வாட்டர் கேன் கடை உள்ளிட்ட கடைகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல் இருந்தன.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் சொத்துவரி கட்டவில்லை. இந்த நிலையில் மண்டல உதவி ஆணையர் விஜயகுமார், உதவி வருவாய் ஆணையர் சூர்யபானு, திருநாவுக்கரசு அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது சொத்துவரி கட்டாத 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல வியாசர்பாடியில் சொத்து வரி கட்டாத 12 கடைகளும் சீல் வைக்கப்பட்டது.
கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட ஜவுளிக்கடை, மளிகைக்கடை உள்ளிட்ட 6 கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்தன.
இதையடுத்து 6 கடைகளையும் அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்