என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.98 ஆயிரம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி:
பொன்னேரியை அடுத்த கோளூர் கிராமத்தில் ‘டாஸ்மாக்’ மதுக்கடை உள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குப்புசாமி சூப்பர் வைசராகவும், கவரப் பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று இரவு இருவரும் கடையை மூடிவிட்டு விற்பனை பணம் ரூ.95 ஆயிரத்து 910-யை பையில் வைத்துக்கொண்டு ஒரே மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சேகன்யம் அருகே வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 வாலிபர்கள் அவர்களை வழிமறித்தனர்.
கத்தி, அரிவாளை காட்டி குப்புசாமியையும், ராஜ் குமாரையும் மிரட்டினர். பின்னர் குப்புசாமியிடம் இருந்த ரூ.95 ஆயிரத்து 910-யையும், ராஜ்குமார் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனையும் பறித்தனர்.
மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் டயரை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்