search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பாரப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
    X

    பாப்பாரப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்

    பாப்பாரப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள எர்றப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் சுதா(வயது 17). இவர் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் எழுந்து பெற்றோர் பார்த்தபோது சுதாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×