என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை லாட்ஜில் நகை அடகு கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்23 Oct 2017 10:22 AM GMT (Updated: 23 Oct 2017 10:22 AM GMT)
விருத்தாசலத்தை சேர்ந்த நகை அடகு கடைக்காரர் கடன் தொல்லையால் புதுவை லாட்ஜில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் அமிர்தவாசன் என்ற அபு, (வயது36). இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. நகைஅடகு கடை நடத்தி வந்த அமிர்தவாசன் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்தார். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய தனது அண்ணனிடமும் கடனை அடைக்க பணம் கேட்டார். ஆனால் அவரும் பணம் கொடுக்கவில்லை. இதனால் அமிர்தவாசன் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமிர்தவாசன் தனது மனைவி ஆர்த்தியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு புதுவை வந்தார். மறைமலைஅடிகள் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இரவு லாட்ஜ் ஊழியரிடம் சாப்பாடு எதுவும் வாங்கி வரவேண்டாம் என்று கூறிவிட்டு அறை கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
நேற்று காலை வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் லாட்ஜ் ஊழியர் ஜன்னல் வழியே பார்த்தார். அப்போது அமிர்தவாசன் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து லாட்ஜ் மானேஜர் ஜெயராஜ் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்தியால்பேட்டை சோலைநகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்வர் முருகன் (வயது23) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி (20) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள முருகன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.
அதுபோல நேற்று இரவும் வழக்கம்போல் மதுகுடித்து விட்டு முருகன் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி ஜெயலட்சுமி கண்டித்தார். இதனால் மனமுடைந்த முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இரவு அனைவரும் தூங்கிய பிறகு முருகன் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
திடீரென ஜெயலட்சுமி எழுந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் அமிர்தவாசன் என்ற அபு, (வயது36). இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. நகைஅடகு கடை நடத்தி வந்த அமிர்தவாசன் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்தார். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய தனது அண்ணனிடமும் கடனை அடைக்க பணம் கேட்டார். ஆனால் அவரும் பணம் கொடுக்கவில்லை. இதனால் அமிர்தவாசன் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமிர்தவாசன் தனது மனைவி ஆர்த்தியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு புதுவை வந்தார். மறைமலைஅடிகள் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இரவு லாட்ஜ் ஊழியரிடம் சாப்பாடு எதுவும் வாங்கி வரவேண்டாம் என்று கூறிவிட்டு அறை கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
நேற்று காலை வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் லாட்ஜ் ஊழியர் ஜன்னல் வழியே பார்த்தார். அப்போது அமிர்தவாசன் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து லாட்ஜ் மானேஜர் ஜெயராஜ் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்தியால்பேட்டை சோலைநகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்வர் முருகன் (வயது23) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி (20) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள முருகன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.
அதுபோல நேற்று இரவும் வழக்கம்போல் மதுகுடித்து விட்டு முருகன் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி ஜெயலட்சுமி கண்டித்தார். இதனால் மனமுடைந்த முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இரவு அனைவரும் தூங்கிய பிறகு முருகன் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
திடீரென ஜெயலட்சுமி எழுந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X