என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்ததில் 35 பேர் காயம்
Byமாலை மலர்22 Oct 2017 5:16 PM GMT (Updated: 22 Oct 2017 5:16 PM GMT)
புதுச்சத்திரம் அருகே எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் காயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர்கள், குண்டியமல்லூருக்கு ஒரு வேனில் நேற்று சென்றனர். அங்கு உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வேனில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
புதுச்சத்திரம் அருகே உள்ள ஆயித்துறை என்ற இடத்தில் பெருமாள் ஏரிக்கரையில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 35 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கஸ்தூரி, ராணி, அரசம்மாள், சுமதி, சிவகாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர்கள், குண்டியமல்லூருக்கு ஒரு வேனில் நேற்று சென்றனர். அங்கு உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வேனில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
புதுச்சத்திரம் அருகே உள்ள ஆயித்துறை என்ற இடத்தில் பெருமாள் ஏரிக்கரையில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 35 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கஸ்தூரி, ராணி, அரசம்மாள், சுமதி, சிவகாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X