என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காயல்பட்டினத்தில் மீன் வியாபாரி மனைவியிடம் ரூ.2½ லட்சம் நகை திருட்டு
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் அந்தோணி (வயது 50). மீன் பிடிக்கும் தொழில் மற்றும் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மோட்ச ராணி (45). இவர் தனது 2 ஜோடி தங்க வளையல்கள் மற்றும் ஒரு செயினை காயல்பட்டினம் பஜாரில் உள்ள தனியார் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு அடகு வைத்திருந்தார். மொத்தம் 11 பவுன் உள்ள அந்த நகைகளின் மதிப்பு ரூ. 2 1/2 லட்சம் ஆகும்.
நேற்று மதியம் மோட்ச ராணி வங்கிக்கு சென்று கடன் தொகையை செலுத்தி தனது நகைகளை மீட்டுள்ளார். பின்னர் மணி பர்சில் நகைகளை வைத்துக் கொண்டு பரிமார் தெருவில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது மணிபர்சை கை அருகில் வைத்திருந்தார்.
காய்கறி வாங்கிவிட்டு பணம் கொடுக்க மணிபர்சை பார்த்தபோது அதனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோட்ச ராணி அங்கிருந்த கடைக்காரர் உள்ளிட்ட சிலரிடம் தனது மணிபர்சைப் பற்றி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். அந்த மணிபர்சில் நகைகளுடன் ரூ. 3 ஆயிரம் ரொக்கமும், செல்போன் ஒன்றும் இருந்துள்ளன. இவை அனைத்தும் மாயமானது குறித்து மோட்ச ராணி ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது இம்ராதுல்லா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்