என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உழவர்கரையில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீசர். டி.வி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹீமாஜா (வயது24) இவர்கள் இருவரும் காதலித்து 2011-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே சீசர் தனது மனைவியிடம் அவரது தாய் வீட்டுக்கு சென்று அடிக்கடி பணம் வாங்கி வரச்சொல்லி அந்த பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்தார். அதுபோல் சம்பவத்தன்று தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வருமாறு ஹீமாஜாவை சீசர் வலியுறுத்தினார்.
அதன்படி ஹீமாஜாவும் கீழூரில் தாய் வீட்டுக்கு சென்று பணம் கேட்டார். அதற்கு அவரது தாய் மின்னொளி இரண்டொரு நாளில் பணம் தருவதாக கூறினார். அதனை ஹீமாஜா தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஹீமாஜா கணவர் வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஹீமாஜாவின் தாய் மின்னொளி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்