என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊத்துக்கோட்டை பண்ணை வீட்டில் தொழிலாளியை தாக்கி ரூ. 45 ஆயிரம் கொள்ளை: 4 பேர் கைது
ஊத்துக்கோட்டை:
வெள்ளாத்துகோட்டையில் திருவொற்றியூரை சேர்ந்த கல்யாணராமன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள் ளது. இங்கு கனகம்மா சத்திரத்தை அடுத்த தோமூரை சேர்ந்த பிரபாகரன் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் கல்யாணராமன் பண்ணை வீட்டுக்கு வந்தார். அப்போது பண்ணை வீட்டு பராமரிப்பு செலவுக்காக ரூ. 45 ஆயிரம் ரொக்கத்தை பிரபாகரிடம் கொடுத்து சென்றார்.
இந்த நிலையில் இரவில் பிரபாகரன் மட்டும் பண்ணை வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை தாக்கி ரூ. 45 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த பிரபாகரனுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர் பபிதா ஸ்ரீபபி, சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் பூண்டியை சேர்ந்த ரவி, சிறுகானூர் ரமேஷ் குமார், தங்கனூர் பிக்டோ, நெய்வேலியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் பிரபாகரனை தாக்கி பணம் கொள்ளையடித்தது தெரியவந்தது.
அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய அவர் களது கூட்டாளிகள் கபில், இன்பா, கருணா ஆகியோரை தேடி வருகிறார்கள். கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்