என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வம்பாகீரப்பாளையத்தில் ஆட்டோ டிரைவர் மனைவி மாயம்
Byமாலை மலர்21 Oct 2017 2:12 PM GMT (Updated: 21 Oct 2017 2:12 PM GMT)
வம்பா கீரப்பாளையத்தில் வீட்டில் இருந்த ஆட்டோ டிரைவர் மனைவி மாயமானார்.
புதுச்சேரி:
புதுவை வம்பா கீரப்பாளையம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வள்ளியம்மை (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி தீபாவளி பண்டிகைக்கு மகாலிங்கம் நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். நள்ளிரவு வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த வள்ளியம்மையை காணாமல் திடுக்கிட்டார். செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் வள்ளியம்மை இல்லை.
இதையடுத்து மகாலிங்கம் தனது மனைவி மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வள்ளியம்மையை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X