search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில் குளத்தில் மிதந்த ஆண் பிணம்: உடலை மீட்டு போலீசார் விசாரணை
    X

    திருத்துறைப்பூண்டியில் குளத்தில் மிதந்த ஆண் பிணம்: உடலை மீட்டு போலீசார் விசாரணை

    திருத்துறைப்பூண்டி பெரிய கோவில் எதிரே உள்ள குளத்தில் இன்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரிய கோவில் எதிரே உள்ள குளத்தில் இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் டி.எஸ்.பி. ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப் பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×