search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் பேராசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திருச்சியில் பேராசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளை

    திருச்சியில் பேராசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் பத்திரிநாத், இவர் சேலம் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சொருபராணி (வயது 45), திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இதற்காக சொருபராணி திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் கடவுள் பூங்கா பகுதியில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் கிருஷ்ணகிரியில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார்.

    விடுமுறை முடிந்து இன்று அதிகாலை திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் அங்கும், இங்குமாக சிதறி கிடந்தது.

    மேலும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இது குறித்து சொருபராணி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×