என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர்: திருத்தணி மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி
Byமாலை மலர்21 Oct 2017 7:54 AM GMT (Updated: 21 Oct 2017 7:54 AM GMT)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலைப்பாதையில் சுற்றுலா வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலை சுற்றிப்பார்க்க மதுரையில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர்.
அந்த பேருந்து திருத்தணி மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் அந்த ஆட்டோவின் ஓட்டுநர் குமார் உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பேருந்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த திருத்தணி கோட்டாட்சியர் ஜெயராமன், மீட்புப்பணிகளை பார்வையிட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X