என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விவசாயி பலி
Byமாலை மலர்20 Oct 2017 4:40 PM GMT (Updated: 20 Oct 2017 4:40 PM GMT)
அய்யலூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விவசாயி பலியாகினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது50) விவசாயி. இவர் தனது நண்பரான காதர் மீரான் (வயது34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அய்யலூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வடமதுரை தனியார் கல்லூரி அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த எர்ரம்மாள் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த மூவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டிவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை சப்-இன்ஸ் பெக்டர் நேருதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X