search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே பெண் அடித்துக்கொலை: கள்ளக்காதலனின் மனைவி கைது
    X

    நெல்லை அருகே பெண் அடித்துக்கொலை: கள்ளக்காதலனின் மனைவி கைது

    நெல்லை அருகே பணத்தகராறில் பெண்ணை அடித்துக்கொலை செய்த கள்ளக்காதலனின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குளம்:

    நெல்லை அருகே உள்ள வல்லவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை திரேசம்மாள் (வயது 35). இவரது கணவர் பெருமாள் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். குழந்தை திரேசம்மாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் குழந்தை திரேசம்மாளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (37) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. சுப்பிரமணியனுக்கு ஏற்கனவே திருமணமாகி சுப்புலட்சுமி (35) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சுப்பிரமணியனின் மனைவி முத்துலட்சுமிக்கு தெரியவந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர், குழந்தை திரேசம்மாள் வீட்டுக்கு சென்று, ‘தனது கணவரிடம் பேசி பழகக்கூடாது’ என்று எச்சரித்தார்.

    அப்போது குழந்தை திரேசம்மாள், சுப்பிரமணியன் தன்னிடம் பணம் கடன் வாங்கி உள்ளதாகவும், அந்த பணத்தை திருப்பி தந்தால், அவரிடம் பேசுவதை விட்டு விடுவதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று, குழந்தை திரேசம்மாள், சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்று தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது சுப்பிரமணியனும், அவரது மனைவி சுப்புலட்சுமியும் சேர்ந்து குழந்தை திரேசம்மாளிடம் தகராறு செய்தனர்.

    அப்போது சுப்பிரமணியன் இரும்புகம்பியால் குழந்தை திரேசம்மாளை தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து உயிருக்கு போராடினார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் குழந்தை திரேசம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் சுப்பிரமணியன், அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகிய 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், சேகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சுப்புலட்சுமியை கைது செய்தனர். வெளியூருக்கு தப்பி ஓடிய சுப்பிரமணியனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×