என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் திருக்கோவிலூரை சேர்ந்த நிவேதா (வயது24) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை.
திருணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் நிவேதா மனவருத்தத்தால் இருந்து வந்தார். மேலும் நிவேதாவுக்கு அடிக்கடி உடல்நிலைமையும் பாதிக்கப்பட்டது. இதனால் நிவேதா சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றனர். பின்னர் அன்று இருவரும் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் நேற்று காலை செந்தில்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஆஸ்பெட்டாஸ் கூரையில் நிவேதா சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு டீக்கடையில் டீமாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தினால் கண்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் கண்ணன் அவதி அடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நோய் கொடுமை அதிகமாகவே வாழ்க்கையில் வெறுப்படைந்து கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியலறையில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்