search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மோசடி: மேலாளர் கைது
    X

    திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மோசடி: மேலாளர் கைது

    திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்காளூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதிநிறுவனம் உள்ளது.

    இங்கு ஊத்துக்கோட்டையை அடுத்த வேலகாபுரத்தை சேர்ந்த சிவபிரகாசம் மேலாளராக இருந்தார்.

    நிதி நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் சரிபார்த்த போது சிவபிரகாசம் ரூ. 3 லட்சத்து 34 ஆயிரம் கையாடல் செய்து இருப்பது தெரிந்தது.

    இது குறித்து திருவள்ளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×