என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள் - ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
Byமாலை மலர்18 Oct 2017 7:23 AM GMT (Updated: 18 Oct 2017 7:23 AM GMT)
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள் என ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கமல் தனது டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ஆராய்ச்சியின் நிலவேம்பு பயன்படுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியும் வரை அதை விநியோகம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டில் கூறியிருப்பதாவது:-
“சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X