search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளை அருகே என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு
    X

    பாளை அருகே என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு

    பாளை அருகே என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை டக்கரம்மாள்புரம் அருகே உள்ள கெபி நகரை சேர்ந்தவர் சாஜன். இவரது மனைவி ஏஞ்சல் மேரி கிரீனா (வயது45). இவர் ஆரல்வாய் மொழியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று கல்லூரி முடிந்து பஸ்சில் டக்கரம்மாள்புரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் ஏஞ்சல் மேரியிடம் நின்று ஒரு முகவரியை விசாரித்துள்ளனர். ஏஞ்சல் மேரி பதில் சொல்வதற்குள், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், ஏஞ்சல் மேரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை இழுத்து பறித்தான். ஏஞ்சல் மேரி தனது கையால் செயினை பிடித்து கொண்டு அலறினார்.

    ஆனாலும் கொள்ளையன் செயினின் ஒரு பகுதியை வேகமாக அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இதில் பேராசிரியை ஏஞ்சல் மேரி கையில் 3 பவுன் செயின் மட்டுமே சிக்கியது. கொள்ளையன் 4 பவுன் தங்க செயினுடன் தப்பி ஓடி விட்டான்.

    இதுகுறித்து அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அந்த பகுதியில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதால், போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×