என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலத்தில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
சேலம்:
சேலம், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள நடராஜன் நகரில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் என்ஜினீரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகன், மைசூரில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கன்னங்குறிச்சி, நடராஜன் நகரில் உள்ள வீட்டில் சந்திரகலாவும், அவருடைய மகளும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் புறப்பட்டு மைசூரில் வேலை பார்த்து வரும் மகனை பார்ப்பதற்காக சென்றனர். பின்னர் இவருவம் அங்கு மகன் வீட்டில் சில நாட்டிகள் தங்கி விட்டு, நேற்று இரவு மைசூரில் இருந்து புறப்பட்டு இன்று காலை சேலத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரகலா நேராக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட இந்த நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
உடனடியாக இது குறித்து பெங்களூருவில் உள்ள தனது கணவர் மணிவண்ணனுக்கு செல்போன் மூலம் சந்திரகலா தகவல் கொடுத்தார். மேலும் மகனிடம் இது பற்றி தெரிவித்தார். பின்னர் அவர்கள் போலீசில் புகார் செய்யும் படி அறிவுரை கூறினர். அதன்படி சந்திரகலா நேராக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.
இதையடுத்து, போலீசார் நடராஜன் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர். பின்னர் நகை, பணம் கொள்ளை குறித்து அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், தாயும், மகளும் வீட்டை பூட்டி விட்டு, மைசூருக்கு சென்றதை, யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு இருக்கிறார்கள். அதன்பிறகு, ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில், நள்ளிரவு வேளையில் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, வீட்டின் கதவு மற்றும் உடைக்கப்பட்ட பீரோ உள்ளிட்டவைகளில் இருந்த கைரேகைகளை சேகரித்தார்கள். பின்னர் அந்த கைரேகைகளை, பழைய கொள்ளையர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஆய்வு கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பீட்டு பார்க்கப்பட உள்ளது.
ஆள் இல்லாத வீட்டில் புகுந்து கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க கன்னங்குறிச்சி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். என்ஜினீயர் வீட்டில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்