search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு - 2 பேர் கைது
    X

    தேவதானப்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு - 2 பேர் கைது

    தேவதானப்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததால் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேனி:

    தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு தலைமையிலான போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கெங்குவார் பட்டியில் காட்டுராஜா என்பவர் தோட்டத்தில் அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது தெரிய வந்தது.

    போலீசார் விரைந்து சென்று பார்த்த போது 500 கிராம் எடை கொண்ட கரித்தூள், 100 கிராம் கந்தகபொடி, 50 கிராம் சில்வர்பொடி மற்றும் 50 திரிகள், 200 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் வெடிகுண்டுகள் தயாரித்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வீரக்கல்கோட்டை தெருவை சேர்ந்த சின்னசாமி (வயது57), மற்றும் கெங்குவார்பட்டியை சேர்ந்த காட்டுராஜா (55) என தெரிய வந்தது.

    போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×