search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் விளையாட கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை
    X

    செல்போன் விளையாட கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

    கோவையில் செல்போன் விளையாட கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை விளாங்குறிச்சி சரவணம்பட்டி ரோடு ஸ்ரீகுமரன்நகரை சேர்ந்தவர் சதானந்தன். யோகா மாஸ்டர். இவரது மகள் சம்பிரிதி (வயது 15) புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சதானந்தன் வெளியே சென்றிருந்தார். சம்பிரிதி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

    தேர்வுக்கு படிக்காமல் டி.வி. பார்க்கிறாயே? என சம்பிரிதியை அவரது தாய் கண்டித்தார். பின்னர் சம்பிரிதி அவரது அக்காளின் செல்போனை விளையாட எடுத்தார். அவர் செல்போனை கொடுக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த சம்பிரிதி வீட்டு அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். வெகுநேரமாகியும் அறை திறக்கப்படாததால் பெற்றோர் கதவை தட்டினார். அதன்பின்னரும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு சீலிங்கில் போர்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    புகாரின் பேரில் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    Next Story
    ×