என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் உலக முட்டை தினம் கொண்டாட்டம்
Byமாலை மலர்15 Oct 2017 4:02 PM GMT (Updated: 15 Oct 2017 4:02 PM GMT)
ஓசூரில் உலக முட்டை தினம் கொண்டாட்டப்பட்டது. இதில் 1500 முட்டைகள் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஓசூர்:
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-வது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓசூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் ஒரு அங்கமாக உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும், ஓசூர் அரசு ஆஸ்பத்திரியும் இணைந்து, நேற்று உலக முட்டை தினத்தை கொண்டாடின.
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இவ்விழாவிற்கு கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் மணி தலைமை தாங்கி பேசினார். அரசு ஆஸ்பத்திரியின் முதன்மை மருத்துவர் கீதா உள்பட பலர் பேசினார்கள். இதில், முட்டையின் முக்கியத்துவம், பலன்கள், மற்றும் முட்டை ஒரு சத்தான, சைவ உணவு என்பதை உள், புற நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
விழாவில், கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியின் உள், புற நோயாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி 1500 முட்டைகள், கல்லூரியின் சார்பில் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, முனைவர் ரமேஷ் செய்திருந்தார்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-வது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓசூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் ஒரு அங்கமாக உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும், ஓசூர் அரசு ஆஸ்பத்திரியும் இணைந்து, நேற்று உலக முட்டை தினத்தை கொண்டாடின.
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இவ்விழாவிற்கு கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் மணி தலைமை தாங்கி பேசினார். அரசு ஆஸ்பத்திரியின் முதன்மை மருத்துவர் கீதா உள்பட பலர் பேசினார்கள். இதில், முட்டையின் முக்கியத்துவம், பலன்கள், மற்றும் முட்டை ஒரு சத்தான, சைவ உணவு என்பதை உள், புற நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
விழாவில், கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியின் உள், புற நோயாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி 1500 முட்டைகள், கல்லூரியின் சார்பில் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, முனைவர் ரமேஷ் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X