என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே திருடன் என நினைத்து தாத்தா-பேரனை தாக்கிய கும்பல்
Byமாலை மலர்15 Oct 2017 12:06 PM GMT (Updated: 15 Oct 2017 12:06 PM GMT)
தேனி அருகே ஆடு திருடர்கள் என நினைத்து தாத்தா- பேரனை கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:
தேனி அருகே தருமாபுரி வடக்குதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது70). இவரது மனைவி அங்கம்மாள்(65). இவர்களது பேரன் அசோக்குமார்(19). இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த நீலமேகம் என்பவரது வீட்டில் இருந்த ஆடு திருடுபோனது. இதை அசோக்குமார்தான் திருடியிருப்பார் என்று நீலமேகம் சந்தேகப்பட்டார்.
சம்பவத்தன்று அசோக்குமார் வீட்டிற்கு சென்று நீலமேகம் இதுகுறித்து கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நீலமேகம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கிருஷ்ணசாமி மற்றும் அசோக்குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த தாத்தா-பேரன் தேனி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் நீலமேகம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X