என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம்: தந்தை கைது
Byமாலை மலர்14 Oct 2017 10:34 AM GMT (Updated: 14 Oct 2017 10:34 AM GMT)
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே வேலையாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய 16 வயது மகள், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில், திருமண வயதை எட்டாத அந்த சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (27) என்ற வாலிபருக்கு கடந்த மாதம் 4-ந் தேதி பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து, சமூக நலத் துறை விரிவு அலுவலர் தனலட்சுமி விசாரணை நடத்தி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தை தேவேந்திரனை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியை திருமணம் செய்த தமிழரசன், சிறுமியின் தாய் அஞ்சலை, உறவினர்கள் பரசுராமன், ஏழுமலை, பாண்டு ஆகியோரையும் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை அருகே வேலையாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய 16 வயது மகள், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில், திருமண வயதை எட்டாத அந்த சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (27) என்ற வாலிபருக்கு கடந்த மாதம் 4-ந் தேதி பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து, சமூக நலத் துறை விரிவு அலுவலர் தனலட்சுமி விசாரணை நடத்தி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தை தேவேந்திரனை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியை திருமணம் செய்த தமிழரசன், சிறுமியின் தாய் அஞ்சலை, உறவினர்கள் பரசுராமன், ஏழுமலை, பாண்டு ஆகியோரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X