என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்காதல் விவகாரம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்
Byமாலை மலர்13 Oct 2017 3:26 PM GMT (Updated: 13 Oct 2017 3:26 PM GMT)
தர்மபுரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பகுதியில் உள்ள சென்னப்ப கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா(37). இவர்களுக்கு சக்தி(10), சிவகுமார்(8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், சத்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த முருகன், உடனே மனைவி சத்யாவை அழைத்து சத்தம் போட்டார். அப்போது, உனக்கும், முருகனுக்கும் இடையே தவறான பழக்கம் இருப்பதாக ஊர் மக்கள் பேசி வருகிறார்கள்.
எனவே, முருகனுடன் உள்ள பழக்கத்தை கைவிடுமாறும், நாம் இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். அவர்களை நன்றாக படிக்க வைத்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முருகனுடன் பேசாதே? பழகாதே? என சத்யாவுக்கு முருகேசன் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.
மேலும் முருகன் உன்னை ஏமாற்றுகிறான். அவனை நம்பினால் உன்னை நடுத்தெருவில் விட்டு விடுவான் என்றும் கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாறி மாறி சண்டை போட்டதாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்யா அவரை விட்டு பிரிந்து முருகனுடன் சென்று ஈரோட்டில் குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே, சத்யாவின் உறவினர் ஒருவர் ஊரில் திடீரென இறந்தார். இதை கேள்விப்பட்ட சத்யா, முருகனிடம், நான் உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள செல்கிறேன். நீங்கள் அங்கு வந்தால் பிரச்சனை ஏற்படும். ஆகவே நான் மட்டும் ஊருக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டில் இருந்து மாரண்ட அள்ளி பகுதிக்கு வந்தார்.
மனைவி சத்யா ஊருக்கு வந்ததை அறிந்த கணவர் முருகேசன் அங்கு வந்து, என்னையும், இரண்டு மகன்களையும் தவிக்க விட்டு முருகனுடன் சென்று விட்டாயே என கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பு உருவானது. அப்போது முருகேசன் அடிக்க முயன்றார்.
இதனால் பயந்த சத்யா பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் ஓடி பதுங்கினார். ஆனால், முருகேசன் அவரை விடாமல் துரத்திச் சென்று வீட்டுக்குள் புகுந்து பதுங்கி இருந்த சத்யாவை பிடித்து இழுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
மனைவி இறந்து விட்டதை உறுதி செய்த முருகேசன்,நேராக மாரண்ட அள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பகுதியில் உள்ள சென்னப்ப கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா(37). இவர்களுக்கு சக்தி(10), சிவகுமார்(8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், சத்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த முருகன், உடனே மனைவி சத்யாவை அழைத்து சத்தம் போட்டார். அப்போது, உனக்கும், முருகனுக்கும் இடையே தவறான பழக்கம் இருப்பதாக ஊர் மக்கள் பேசி வருகிறார்கள்.
எனவே, முருகனுடன் உள்ள பழக்கத்தை கைவிடுமாறும், நாம் இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். அவர்களை நன்றாக படிக்க வைத்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முருகனுடன் பேசாதே? பழகாதே? என சத்யாவுக்கு முருகேசன் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.
மேலும் முருகன் உன்னை ஏமாற்றுகிறான். அவனை நம்பினால் உன்னை நடுத்தெருவில் விட்டு விடுவான் என்றும் கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாறி மாறி சண்டை போட்டதாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்யா அவரை விட்டு பிரிந்து முருகனுடன் சென்று ஈரோட்டில் குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே, சத்யாவின் உறவினர் ஒருவர் ஊரில் திடீரென இறந்தார். இதை கேள்விப்பட்ட சத்யா, முருகனிடம், நான் உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள செல்கிறேன். நீங்கள் அங்கு வந்தால் பிரச்சனை ஏற்படும். ஆகவே நான் மட்டும் ஊருக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டில் இருந்து மாரண்ட அள்ளி பகுதிக்கு வந்தார்.
மனைவி சத்யா ஊருக்கு வந்ததை அறிந்த கணவர் முருகேசன் அங்கு வந்து, என்னையும், இரண்டு மகன்களையும் தவிக்க விட்டு முருகனுடன் சென்று விட்டாயே என கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பு உருவானது. அப்போது முருகேசன் அடிக்க முயன்றார்.
இதனால் பயந்த சத்யா பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் ஓடி பதுங்கினார். ஆனால், முருகேசன் அவரை விடாமல் துரத்திச் சென்று வீட்டுக்குள் புகுந்து பதுங்கி இருந்த சத்யாவை பிடித்து இழுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
மனைவி இறந்து விட்டதை உறுதி செய்த முருகேசன்,நேராக மாரண்ட அள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X