என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்டுமன்னார்கோவில் அருகே மரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
Byமாலை மலர்13 Oct 2017 10:28 AM GMT (Updated: 13 Oct 2017 10:28 AM GMT)
காட்டுமன்னார்கோவில் அருகே பாசனத்துக்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி மரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வேளாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 61). விவசாயி.
இவர் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள வேப்ப மரத்தில் திடீரென்று ஏறினார்.
அவரது கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வைத்திருந்தார். மரத்தின் மேல் ஏறி நின்ற அவர், நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த தகவல் காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மரத்தில் ஏறி நின்ற இந்திரஜித்தை கீழே இறங்குமாறு கூறினர்.
அப்போது இந்திரஜித், “விவசாய பாசனத்துக்காக கல்லணை மற்றும் கீழணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் கீழே இறங்குவேன்” என்றார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன், “பாசனத்துக்காக இன்னும் 3 நாட்களில் தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்” என்று இந்திரஜித்திடம் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட இந்திரஜித் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது போலீசார் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வேளாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 61). விவசாயி.
இவர் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள வேப்ப மரத்தில் திடீரென்று ஏறினார்.
அவரது கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வைத்திருந்தார். மரத்தின் மேல் ஏறி நின்ற அவர், நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த தகவல் காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மரத்தில் ஏறி நின்ற இந்திரஜித்தை கீழே இறங்குமாறு கூறினர்.
அப்போது இந்திரஜித், “விவசாய பாசனத்துக்காக கல்லணை மற்றும் கீழணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் கீழே இறங்குவேன்” என்றார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன், “பாசனத்துக்காக இன்னும் 3 நாட்களில் தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்” என்று இந்திரஜித்திடம் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட இந்திரஜித் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது போலீசார் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X