என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசனூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: கர்நாடக மாநில வாலிபர் பலி
Byமாலை மலர்12 Oct 2017 5:16 PM GMT (Updated: 12 Oct 2017 5:16 PM GMT)
ஆசனூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கர்நாடக மாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் ஒஸ்பட்டை சேர்ந்தவர் மாதேவன் (வயது38). இவரது அக்கா வீடு சத்தி வனப்பகுதி கெத்தேசாலில் உள்ளது. அக்கா உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இதனால் தன் அக்காவை பார்க்க மாதேவன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அக்காவை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
ஆசனூரில் ஒரு ஓட்டல் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவர் மீது மோதிய வேன் டிரைவர் கீழே குதித்து ஓடி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் ஒஸ்பட்டை சேர்ந்தவர் மாதேவன் (வயது38). இவரது அக்கா வீடு சத்தி வனப்பகுதி கெத்தேசாலில் உள்ளது. அக்கா உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இதனால் தன் அக்காவை பார்க்க மாதேவன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அக்காவை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
ஆசனூரில் ஒரு ஓட்டல் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவர் மீது மோதிய வேன் டிரைவர் கீழே குதித்து ஓடி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X