என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தல்லாகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்12 Oct 2017 11:13 AM GMT (Updated: 12 Oct 2017 11:13 AM GMT)
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை நாகனாகுளம் வாசுநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகமது முகைதீன் (வயது 75). இவர் குடும்பத்துடன் பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று அவர்கள் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகை கொள்ளை போயிருப்பதாக முகமது முகைதீன் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தத்தனேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சேதுராமன் மகன் வினோத் குமார் (37). இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள், வினோத் குமாரிடம் உங்கள் செல்போனை தாருங்கள். ஒரு போன் செய்துவிட்டு தருகிறோம் என்றனர். இதனை நம்பி வினோத்குமார் செல்போனை கொடுத்தார். அதனை வாங்கி பேசிய 2 பேரும், திடீர் என செல்போனுடன் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து போலீசில் வினோத்குமார் புகார் செய்தார். அதில், ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் பறித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுரை நாகனாகுளம் வாசுநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகமது முகைதீன் (வயது 75). இவர் குடும்பத்துடன் பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று அவர்கள் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகை கொள்ளை போயிருப்பதாக முகமது முகைதீன் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தத்தனேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சேதுராமன் மகன் வினோத் குமார் (37). இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள், வினோத் குமாரிடம் உங்கள் செல்போனை தாருங்கள். ஒரு போன் செய்துவிட்டு தருகிறோம் என்றனர். இதனை நம்பி வினோத்குமார் செல்போனை கொடுத்தார். அதனை வாங்கி பேசிய 2 பேரும், திடீர் என செல்போனுடன் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து போலீசில் வினோத்குமார் புகார் செய்தார். அதில், ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் பறித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X