search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா தலைவர் மகனை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்
    X

    பா.ஜனதா தலைவர் மகனை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகனை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஜவானடபவன் முன் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மகன் ஊழல் செய்து வருகிறார் என கூறி அதை கண்டித்து காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் முன்னிலை வகித்தார்.

    அமித்ஷா மகனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதில் விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், அம்புலி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் செல்வ குமாரசாமி, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, பாஷா, முகமது அர்சத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×