search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே விபத்து: பழுதான பாலம் உடைந்து மணல் லாரி கவிழ்ந்தது
    X

    சீர்காழி அருகே விபத்து: பழுதான பாலம் உடைந்து மணல் லாரி கவிழ்ந்தது

    சீர்காழியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி பழுதடைந்த பாலத்தை கடக்கும் போது எதிர்பாராமல் பாலம் உடைந்து லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
    சீர்காழி:

    சீர்காழி ஒன்றியம், கதிராமங்கலம் ஊராட்சிக்கும் மயிலாடுதுறை ஒன்றியம், தர்ம தானபுரம் ஊராட்சிக்கும் இடையில் மன்னியாறு பாசன வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலை கதிராமங்கலம், திருநகரி, தென்னலகுடி, தர்மதானபுரம், ஆத்துக்குடி, திருப்பங்கூர், கன்னியாகுடி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், பாசன மற்றும் வடிகால் வசதியினை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாலம் கடந்த 4 ஆண்டுகளாக சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

    இந்த பழுதடைந்த பாலத்தை சீரமைக்கக்கோரி பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சீர்காழி-மயிலாடுதுறை ஆகிய ஒன்றியங்களில் பொதுமக்கள் சீரமைக்க கோரி பலமுறை புகார் செய்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று கதிராமங்கலத்தில் இருந்து தர்மதானபுரத்திற்கு மணல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பழுதடைந்த பாலத்தை கடக்கும் போது எதிர்பாராமல் பாலம் உடைந்து லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் லாரி டிரைவர் உயிர் தப்பினார். இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×