என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உருவையாறு கிராமம் குடுவையாறு பகுதியில் நேற்று அதிகாலை 3 வாலிபர்கள் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
ஆனால், போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆசிப் அலி (வயது 22), அதே பகுதியை சேர்ந்த புஷ்பலிங்கம் (38) மற்றும் திருக்காஞ்சியை சேர்ந்த ராஜா (31) என்பதும், இவர்கள் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்