என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புழல் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலதிபர் பலி
சென்னை:
சென்னையை அடுத்த புழல் பாலாஜி கார்டன் 2 வது பிரதான சாலையை சேர்ந்தவர் வஜ்ஜாராம் (48) தொழிலதிபர். இவரது மகன் பீமாராம் (17) கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று காலை தனது மகன் பீமாராமை செங்குன்றம் பஸ் நிலையத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்தார். வடபெரும்பாக்கம்-புழல் செல்லும் காந்தி சாலையில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அதில் தலைநசுங்கி வஜ்ஜாராம் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் பீமாராம் காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் (28) கைது செய்யப்பட்டார். அவர் புழல் திருநீலகண்டன் நகரை சேர்ந்தவர். மகன் கண் முன்னே தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்