search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலதிபர் பலி
    X

    புழல் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலதிபர் பலி

    புழல் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலதிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த புழல் பாலாஜி கார்டன் 2 வது பிரதான சாலையை சேர்ந்தவர் வஜ்ஜாராம் (48) தொழிலதிபர். இவரது மகன் பீமாராம் (17) கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இன்று காலை தனது மகன் பீமாராமை செங்குன்றம் பஸ் நிலையத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்தார். வடபெரும்பாக்கம்-புழல் செல்லும் காந்தி சாலையில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அதில் தலைநசுங்கி வஜ்ஜாராம் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் பீமாராம் காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் (28) கைது செய்யப்பட்டார். அவர் புழல் திருநீலகண்டன் நகரை சேர்ந்தவர். மகன் கண் முன்னே தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×