என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்6 Oct 2017 11:41 AM GMT (Updated: 6 Oct 2017 11:42 AM GMT)
சூலூர் அருகே கல்லூரி மாணவி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
சூலூர் அருகே கல்லூரி மாணவி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் கிருபா (வயது 18) மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கிருபா சாணிப்பவுடர் குடித்து மயங்கி மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தகவலின்பேரில் சூலூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். கிருபா கல்லூரி முடிந்ததும் பஸ்சில் வீடு திரும்புவது வழக்கம். அப்போது வாலிபர்கள் சிலர் அவரை ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படுகிறது.
எனவே ஈவ்டீசிங் கொடுமையால் கிருபா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் அருகே கல்லூரி மாணவி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் கிருபா (வயது 18) மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கிருபா சாணிப்பவுடர் குடித்து மயங்கி மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தகவலின்பேரில் சூலூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். கிருபா கல்லூரி முடிந்ததும் பஸ்சில் வீடு திரும்புவது வழக்கம். அப்போது வாலிபர்கள் சிலர் அவரை ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படுகிறது.
எனவே ஈவ்டீசிங் கொடுமையால் கிருபா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X