என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிளுடன் ரெயில் மீது மோதிய வாலிபர் நசுங்கி சாவு
Byமாலை மலர்4 Oct 2017 4:20 PM GMT (Updated: 4 Oct 2017 4:20 PM GMT)
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில் மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்:
சிவகாசியில் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்தவர் முத்துப்பாண்டி (வயது 26). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கோட்டூர்.
கடந்த சில ஆண்டுகளாக சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முத்துப்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது.
முத்துப்பாண்டியின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முத்துப்பாண்டியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்தார். தற்கொலை செய்ய முடிவு செய்த அவர் மோட்டார் சைக்கிளில் விருதுநகரை அடுத்த கள்ளிக்குடி ரெயில் பாதைக்கு வந்தார்.
ரெயில் தண்டவாளத்தின் அருகே உள்ள காலிமனை பகுதியில் சிறிது நேரம் நின்றார். அப்போது செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் அங்கு வந்தது.
அதனை கண்டதும், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற முத்துப்பாண்டி, ரெயில் என்ஜின் மீது மோதினார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
சம்பவம் குறித்து ரெயில்வே ஹேங்மேன் அழகர்சாமி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதே போல் ரெயில் என்ஜின் டிரைவரும் மதுரை ரெயில் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று முத்துப்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக முத்துப்பாண்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
சிவகாசியில் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்தவர் முத்துப்பாண்டி (வயது 26). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கோட்டூர்.
கடந்த சில ஆண்டுகளாக சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முத்துப்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது.
முத்துப்பாண்டியின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முத்துப்பாண்டியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்தார். தற்கொலை செய்ய முடிவு செய்த அவர் மோட்டார் சைக்கிளில் விருதுநகரை அடுத்த கள்ளிக்குடி ரெயில் பாதைக்கு வந்தார்.
ரெயில் தண்டவாளத்தின் அருகே உள்ள காலிமனை பகுதியில் சிறிது நேரம் நின்றார். அப்போது செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் அங்கு வந்தது.
அதனை கண்டதும், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற முத்துப்பாண்டி, ரெயில் என்ஜின் மீது மோதினார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
சம்பவம் குறித்து ரெயில்வே ஹேங்மேன் அழகர்சாமி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதே போல் ரெயில் என்ஜின் டிரைவரும் மதுரை ரெயில் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று முத்துப்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக முத்துப்பாண்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X