என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கலெக்டர் பேச்சு
Byமாலை மலர்28 Sep 2017 4:12 PM GMT (Updated: 28 Sep 2017 4:12 PM GMT)
விவசாயம் செழிக்க ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
வேலூர்:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பிர்காவிற்கு உட்பட்ட நேமந்தபுரம், அத்திகுப்பம் மடையப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆவின் தலைவர் வேலழகன் கலந்து கொண்டனர். முகாமில் 116 பயனாளிகளுக்கு ரூ.41¾ லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.
‘‘ஓய்வூதியம் பெற்ற முதியோர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒடுகத்தூரில் உத்திரகாவேரி ஆறுசெல்கிறது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அந்த சமயத்தில் ஆற்றைகடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். ஆகவே தரைபாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக கட்டித்தர வேண்டும்’’என்றார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசுகையில், ‘‘இப்பகுதிக்கு உயர்மட்ட மேம்பாலம் வேண்டும் என எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக உயர்மட்ட மேம்பாலம் கட்டி தரப்படும். அணைக்கட்டு தொகுதி பின்தங்கிய தொகுதியாக உள்ளது. விவசாயம் செழிக்க ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் உறை கிணறுகள் அமைத்து விவசாயத்திற்கு தேவையான நீரை சேமித்து வைக்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வரப்படும்.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெற உள்ள ‘தூய்மையே சேவை’ இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன்முலம் சுத்தமான சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்’’ என்றார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பிர்காவிற்கு உட்பட்ட நேமந்தபுரம், அத்திகுப்பம் மடையப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆவின் தலைவர் வேலழகன் கலந்து கொண்டனர். முகாமில் 116 பயனாளிகளுக்கு ரூ.41¾ லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.
‘‘ஓய்வூதியம் பெற்ற முதியோர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒடுகத்தூரில் உத்திரகாவேரி ஆறுசெல்கிறது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அந்த சமயத்தில் ஆற்றைகடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். ஆகவே தரைபாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக கட்டித்தர வேண்டும்’’என்றார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசுகையில், ‘‘இப்பகுதிக்கு உயர்மட்ட மேம்பாலம் வேண்டும் என எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக உயர்மட்ட மேம்பாலம் கட்டி தரப்படும். அணைக்கட்டு தொகுதி பின்தங்கிய தொகுதியாக உள்ளது. விவசாயம் செழிக்க ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் உறை கிணறுகள் அமைத்து விவசாயத்திற்கு தேவையான நீரை சேமித்து வைக்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வரப்படும்.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெற உள்ள ‘தூய்மையே சேவை’ இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன்முலம் சுத்தமான சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்’’ என்றார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X