search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே கடலில் வலைவீசிய மீனவர் தவறி விழுந்து பலி
    X

    வேதாரண்யம் அருகே கடலில் வலைவீசிய மீனவர் தவறி விழுந்து பலி

    வேதாரண்யம் அருகே மீன் பிடித்தபோது மீனவர் கடலில் தவறிவிழுந்து இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது42). மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம்(50), கன்னியப்பன்(35), பாண்டியன்(52). இன்று அதிகாலை கருணாநிதி மற்றும் 3 பேரும் நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    வெள்ளப்பள்ளம் கிழக்கே கடலில் மீன் பிடிப்பதற்காக கருணாநிதி வலையை வீசினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கடலுக்குள் தவறி விழுந்தார். உடனடியாக மற்ற 3 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்த கருணாநிதி உடலை மற்ற மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கடலில் தவறி விழுந்து இறந்த கருணாநிதிக்கு சிவகாமி என்கிற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தகவலறிந்த அங்கு வந்த குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

    மீன் பிடிக்க கடலுக்குள் சென்று கரை திரும்பினால் தான் மீனவர்களின் குடும்பம் நிம்மதி பெறும். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களால் மீனவ குடும்பங்கள் வாழ்நாள் நிம்மதி இழந்து கண்ணீரில் மிதக்க வேண்டியிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×