search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து நெல்லை, எர்ணாகுளத்துக்கு சுவிதா சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    சென்னையில் இருந்து நெல்லை, எர்ணாகுளத்துக்கு சுவிதா சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சென்னையில் இருந்து நெல்லை, எர்ணாகுளத்துக்கு சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சுவிதா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    * சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரெயில்(வ.எண்:82633), வரும் 28-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    * எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சுவிதா சிறப்பு ரெயில்(82634), அடுத்த மாதம் 2-ந் தேதி இரவு 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(82603), வரும் 28-ந் தேதி இரவு 9.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    * நெல்லை-சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில்(82604), அடுத்த மாதம் 2-ந் தேதி மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு வந்தடையும்.

    * திப்ருகார்-தாம்பரம் விரைவு ரெயில்(15930), திப்ருகாரில் இருந்து அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து இயக்கப்படும்.

    * தாம்பரம்-திப்ருகார் விரைவு ரெயில்(15929), தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் 5-ந் தேதியில் இருந்து இயக்கப்படும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×