search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி விவசாயி பலி: டிரைவர் கைது
    X

    சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி விவசாயி பலி: டிரைவர் கைது

    சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலியானார்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஏலாகுடியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 57). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் மல்லிபட்டினம் கடைவீதிக்கு சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது மனோரா அருகே உள்ள நாடியம் பிரிவு சாலைக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றபோது வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சத்தியமூர்த்தி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சேதுபாவாசத்திரம் போலீசார் விரைந்து வந்து, சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த விஸ்வநாத் (32) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×