search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம்: ரெயில் மோதி ஊழியர் பலி
    X

    விருத்தாசலம்: ரெயில் மோதி ஊழியர் பலி

    விருத்தாசலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஊழியர் மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் உள்ள புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 63), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் தினமும் விருத்தாசலம் ரெயில்வே நிலைய நடைமேடையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

    அதுபோல் இன்று காலை வழக்கம்போல் ரெயில்நிலைய நடைமேடையில் ராஜவேல் நடைபயிற்சி செய்தார். பின்னர் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நடைமேடையை விட்டு இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜவேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராஜவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×