search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணியில் சினிமா மேக்கப் கலைஞர் கொலை
    X

    வேளாங்கண்ணியில் சினிமா மேக்கப் கலைஞர் கொலை

    வேளாங்கண்ணியில் சினிமா மேக்கப் கலைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாப ராமபுரத்தை சேர்ந்தவர் தெட்சிணா மூர்த்தி. இவரது மகன் சரவணன் (30).

    இவர் சென்னையில் நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்து இருந்தார். பின்னர் சென்னை திரும்பினார்.

    அவர் மீண்டும் ஊருக்கு வருவதாக தகவல் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் வேளாங்கண்ணி பூக்கார தெருவில் சரவணன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வழிந்த நிலையில் காணப்பட்டது.

    அவரை யாரோ கொலை செய்தது தெரிய வந்தது. சென்னை சென்ற சரவணனை யாராவது ஊருக்கு வரவழைத்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    முன்விராதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×