என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே சாலை தடுப்பில் மோதி சுரங்க பாதையில் சிக்கிய பஸ் - 60 பயணிகள் உயிர் தப்பினர்
Byமாலை மலர்25 Sep 2017 9:46 AM GMT (Updated: 25 Sep 2017 9:46 AM GMT)
பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே சுரங்க பாதையில் உள்ள சாலை தடுப்பில் மாநகர அரசு பஸ் மோதிய விபத்தில் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை:
சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரில் இருந்து 102 கே. மாநகர அரசு பஸ் இன்று காலை பாரிமுனை நோக்கி புறப்பட்டது.
மெரினா காமராஜர் சாலை வழியாக வந்த பஸ் தலைமை செயலகத்தை தாண்டி ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சீனிவாசனால் பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை.
சாலை தடுப்பில் மோதிய பஸ் சுரங்கப்பாதைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நின்றது. பஸ் திடீரென விபத்துக்குள்ளானதால் பயணிகள் அலறியடித்தபடி கூச்சல் போட்டனர். விபத்தில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால்சாவடி போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சுரங்கப்பாதையின் நடுவில் பஸ் சிக்கி இருந்ததால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
இதனால் பாரிமுனை வழியாக கடற்கரையில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ்சை மீட்கும் பணி நடந்தது. இதனால் இன்று காலையில் பல மணி நேரமாக அந்த வழியில் போக்குவரத்து தடை பட்டிருந்தது.
சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரில் இருந்து 102 கே. மாநகர அரசு பஸ் இன்று காலை பாரிமுனை நோக்கி புறப்பட்டது.
மெரினா காமராஜர் சாலை வழியாக வந்த பஸ் தலைமை செயலகத்தை தாண்டி ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சீனிவாசனால் பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை.
சாலை தடுப்பில் மோதிய பஸ் சுரங்கப்பாதைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நின்றது. பஸ் திடீரென விபத்துக்குள்ளானதால் பயணிகள் அலறியடித்தபடி கூச்சல் போட்டனர். விபத்தில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால்சாவடி போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சுரங்கப்பாதையின் நடுவில் பஸ் சிக்கி இருந்ததால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
இதனால் பாரிமுனை வழியாக கடற்கரையில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ்சை மீட்கும் பணி நடந்தது. இதனால் இன்று காலையில் பல மணி நேரமாக அந்த வழியில் போக்குவரத்து தடை பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X