search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரத்தில் ஸ்வீட் கடை மாஸ்டர் அடித்து கொலை?: போலீசார் விசாரணை
    X

    தாராபுரத்தில் ஸ்வீட் கடை மாஸ்டர் அடித்து கொலை?: போலீசார் விசாரணை

    தாராபுரத்தில் ஸ்வீட் கடை மாஸ்டர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம்:

    தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் மாஸ்டராக மணி (வயது 18) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் பட்டிகுளம் கிராமம் ஆகும். கடந்த 8 மாதமாக ஸ்வீட் கடை குடோனில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மணி கடந்த வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் ஆற்றில் குளித்து விட்டு இரவில் அறையில் தூங்கினார்.

    அதிகாலை 3 மணியளவில் மணியின் காலில் காயம் இருந்தது. இதனால் அவருடன் தங்கியிருந்த வெங்கடேஷ் என்பவர் மணியை தாராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கு சிகிச்சைக்கு பின் மேல்- சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மது பழக்கத்துக்கு அடிமையான மணி, அடிக்கடி செல்போனில் பெண்களிடம் பேசி கொண் டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட காயத்தில் அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    எனவே மணி அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×