என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாராபுரத்தில் ஸ்வீட் கடை மாஸ்டர் அடித்து கொலை?: போலீசார் விசாரணை
தாராபுரம்:
தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் மாஸ்டராக மணி (வயது 18) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் பட்டிகுளம் கிராமம் ஆகும். கடந்த 8 மாதமாக ஸ்வீட் கடை குடோனில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மணி கடந்த வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் ஆற்றில் குளித்து விட்டு இரவில் அறையில் தூங்கினார்.
அதிகாலை 3 மணியளவில் மணியின் காலில் காயம் இருந்தது. இதனால் அவருடன் தங்கியிருந்த வெங்கடேஷ் என்பவர் மணியை தாராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கு சிகிச்சைக்கு பின் மேல்- சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மது பழக்கத்துக்கு அடிமையான மணி, அடிக்கடி செல்போனில் பெண்களிடம் பேசி கொண் டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட காயத்தில் அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
எனவே மணி அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்