search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    கணவன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை

    சண்முகாபுரத்தில் கணவன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங் நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வந்தவர் சுதா (வயது26). இவர் தனது கணவர் முருகன் மற்றும் 2 குழந்தைகளுடன் லாஸ்பேட்டையில் வசித்து வந்த போது கடந்த ஆண்டு முருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கடந்த 3 மாதமாக சுதா தனது குழந்தைகளுடன் வி.பி.சிங் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று முருகன் இறந்து ஓர் ஆண்டாகி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் சுதா சோகமானார். கணவன் மறைவு சுதாவின் மனதை வாட்டியது. இதனால் மனமுடைந்த சுதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை தனது குழந்தைகளை தெருவில் விளையாட சொல்லி விட்டு வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சுதாவின் தாய் லலிதா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவன் இறந்த நாளில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×