search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே வியாபாரத்துக்கு சென்ற பெண் மாயம்
    X

    கோபி அருகே வியாபாரத்துக்கு சென்ற பெண் மாயம்

    கோபி அருகே வியாபாரத்துக்கு சென்ற பெண் மாயமானது குறித்து அவரது மகள் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அடுத்த புது வள்ளியாம் பாளையம், பெருமாள் நகரை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி சகுந்தலா (வயது 57).

    சகுந்தலா மொடச்சூர் சந்தையில் ஆப்பிள் வியாபாரம் செய்து வந்தார். காலையில் வியாபாரத்துக்கு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.

    அதே போன்று சம்பவத்தன்றும் வழக்கம் போல் சகுந்தலா மொடச் சூர் சந்தைக்கு வியாபார த்துக்காக சென்றார். இரவு வியாபாரம் முடிந்ததும் உறவினரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேர மாகியும் சகுந்தலா வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

    எனினும் சகுந்தலா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று சகுந்தலா பச்சை நிற புடவையும், அதில் எம்ராய்டிங் பூ போட்ட பச்சை நிற ஜாக்கட்டும் அணிதிருந்தார்.

    இது குறித்து சகுந்தலா மகள் சுதா கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கோபி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சகுந்தலாவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×