search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியா
    X
    பிரியா

    மானாமதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் கடந்த 15 நாட்களாக ராஜகம்பீரம், பீக்குளம், காட்டுஉடைகுளம், மேலப்பிடாவூர், கீழமேல்குடி, உள்பட பல ஊர்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    இதனால் மானாமதுரை மருத்துவமனைக்கு தினந்தோறும் சகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.பீக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி (வயது50) மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பலியானார்.

    தொடர்ந்து காட்டு உடைகுளம் கிராமத்தில் மருது (17) என்ற மாணவனும், 65 வயது மூதாட்டியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

    இந்நிலையில் ராஜ கம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசண்முகம் என்பவரது மனைவி பிரியா (30) காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    Next Story
    ×