search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை திட்டமிட்டபடி உடற்கல்வி ஆசிரியர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
    X

    நாளை திட்டமிட்டபடி உடற்கல்வி ஆசிரியர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் இன்று விலக்கியுள்ளதால், நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெற இருந்தது. ஆனால், இந்த தேர்வுக்கு தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அரசு முறையிட்டது.

    அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொண்டனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    11 மாவட்டங்களில் 106 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 37,951 தேர்வர்கள் எழுத உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×