என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாகூர் அருகே திடீர் தீவிபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்
பாகூர்:
பாகூர் அருகே மேல்பரிக்கல்பட்டு குளத்து தெருவை சேர்ந்தவர் ரவி, கூலித்தொழிலாளி. இன்று காலை இவரும், இவரது மனைவி அருள்மொழியும் தங்களது கூரை வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். காலை 10-45 மணியளவில் மின்கசிவு காரணமாக ரவியின் கூரைவிடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் யாரும் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் தீ அருகில் இருந்த கண்ணன், ஜெயமூர்த்தி ஆகியோரது வீடுகளில் பரவி எரிந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு படையினர் தாமதமாகவே சென்று மேலும் தீபரவாமல் அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் 3 வீடுகள் முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தால் மாற்றுஉடை கூட இல்லாததால் குடும்பத்தினர் பார்த்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.
இந்த தீவிபத்து குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகணேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்